48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

விரைவில் நான்கு வேலைநாள்களைக் கொண்ட வாரம், புதிய ஊதிய முறை?

வார வேலை நாள்கள் மற்றும் ஊதிய முறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டத்தை வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

நான்கு வேலைநாள்களைக் கொண்ட வாரம்.. விரைவில் வருகிறது புதிய மாற்றம்

Updated On :22 டிசம்பர் 2021, 8:13 am


பணி மற்றும் தொழில் நிறுவனங்களில் வார வேலை நாள்கள் மற்றும் ஊதிய முறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டத்தை வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்களின் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்தொடர்பு, பணி நிரந்தரம், சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் போன்றவற்றில் நான்கு முக்கியம்சங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி,  வரும் நிதியாண்டு முதல் நான்கு வேலை நாள்களைக் கொண்ட வாரங்களாக மாற்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இந்த புதிய முக்கியம்சங்களின் அடிப்படையில், தொழில் கலாசாரம், ஊதியம், வேலைசெய்யும் நேரம், வார பணிநாள்கள் என பலவும் மாறும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், மத்திய அரசு வரும் நிதியாண்டில் கொண்டு வரவிருக்கும் புதிய மாற்றங்கள் தொடர்பான கொள்கைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டன. தற்போது, மாநிலங்கள், இந்த புதிய கொள்கைகளை பரிசீலித்து, தங்களுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி.

இது தவிர, மத்திய அரசின் இந்த புதிய கொள்கைகள், நடைமுறைக்குவரும்பட்சத்தில், ஊழியர்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம், வாரத்தில் நான்கு நாள்கள் பணியாற்ற வேண்டியது வரும். இதன் மூலம், 48 மணி நேர பணியைக் கொண்ட ஒரு வாரம் என்பது நடைமுறைப்படுத்த முடியும்.

ஆனால், இந்த புதிய நடைமுறை, அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் பின்பற்றப்பட்டால், அதில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், அது தொழிலாளர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தில் சரிவு மற்றும், தொழிலாளர்கள், நிறுவனங்கள் செலுத்தும் வருங்கால வைப்புநிதியின் சுமை அதிகரிப்பு போன்றதாகும்.

அதாவது, தகவல்கள் கூறுவது என்னவென்றால், அதிக பிஎஃப் கட்ட வேண்டியதாக இருக்கும். அதனால், ஊதியம் குறையும் என்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.