சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை(டிச.23) ஆலோசனை

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப்படம்)
Updated On :22 டிசம்பர் 2021, 5:30 am

DIN

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தற்போது வெளிநாடு செல்லாதவர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஏற்கனவே நாடு முழுவதும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.