கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒமைக்ரான் பரவல்: தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் விரைவு 

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

News image
ஒமைக்ரான் தொற்று
Updated On :25 டிசம்பர் 2021, 11:51 am

DIN


புது தில்லி: ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 387 பேர் உயிரிழந்துள்ளனர்.  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,47,79,815 ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,42,23,263 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 77,032 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,41,01,26,404 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 66,09,113 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிஸோரம், கா்நாடகம், பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்டக் குழுக்கள்   விரைந்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கரோனா நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த குழு, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை மாநில, மாவட்ட நிா்வாகங்களுக்கு அக்குழு வழங்கும். 3 முதல் 5 நாள்கள் தங்கியிருந்து மாநிலங்களுக்கான ஆலோசனைகளை வழங்குவா். மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்துவதற்கான தேவையான ஆலோசனைகளை வழங்குவது, கரோனா பரிசோதனை மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்புவது, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்துவா் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.