எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பூஸ்டர் டோஸ் செலுத்த தேவைப்படும் ஆவணங்கள் என்ன? மத்திய அரசு விளக்கம்

கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 டிசம்பர் 2021, 10:09 am

DIN

கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு ஜனவரி 10, 2022 முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்த வரும் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் இணை நோய் குறித்து மருத்துவர்களிடம் எந்த சான்றிதழும் பெற வேண்டிய அவசியம் இல்லை. தடுப்பூசி செலுத்தும் போது மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம்.

முந்தைய இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தும் போது அளித்த பதிவு எண்ணை மட்டும் கொண்டு வந்தால் போது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.