எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பூஸ்டர் டோஸ், சிறார்களுக்கான தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சிறார்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2021, 1:29 pm

DIN

சிறார்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 15 முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசியும் ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருப்பது:

முன்களம், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர்:

  • முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள கோவின் கணக்கு மூலம் தான் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்.
  • இரண்டாம் தவணை செலுத்தப்பட்டு 39 வாரங்கள் அல்லது 9 மாதங்களை கடந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் போடப்படும்.
  • முன்பு செலுத்தப்பட்ட தடுப்பூசியே பூஸ்டர் டோஸாக ஜனவரி 10ஆம் தேதி முதல் செலுத்தப்படும்.
  • பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டவுடன் கோவின் சான்றிதழில் மாற்றம் செய்யப்படும்.
  • ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.

15 - 18 வரையிலான சிறார்:

  • 2007 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
  • ஜனவரி 1 முதல் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும்.
  • ஜனவரி 3 முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
  • சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே போடப்படும்.
  • ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் ஜனவரி 3, 2022 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.