மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

'சர்வதேச விமானங்கள் உள்நுழைவதால் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு' - தில்லி அமைச்சர்

சர்வதேச விமானங்கள் தில்லிக்கு அதிகம் வருவதால் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். 

News image
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்
Updated On :29 டிசம்பர் 2021, 11:17 am

DIN

சர்வதேச விமானங்கள் தில்லிக்கு அதிகம் வருவதால் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். 

இன்று காலை நிலவரப்படி, நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 241 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 540 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதிகபட்சமாக தில்லியில் 238 பேருக்கும் மகாராஷ்டிரத்தில் 167 பேருக்கும், குஜராத்தில் 73 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், 

தில்லி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சில பயணிகளுக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் சில நாள்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நீண்ட நாள்கள் அவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டியுள்ளது. மாவட்ட அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர்

சர்வதேச விமானங்கள் நாட்டிற்குள் நுழைவதாலேயே ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முந்தைய கரோனா அலைகளின் போது கூட, வெளிநாட்டில் இருந்து வருவோரால் தான் பரவல் எண்ணிக்கை அதிகரித்தது. 

தில்லியில் புதன்கிழமை 238 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.