ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அச்சுறுத்தும் ஒமைக்ரான்...உத்தரப் பிரதேச தேர்தல் நடைபெறுமா?: தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் குழு உத்தரப் பிரதேசத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டது.

News image
தேர்தல் ஆணையம்
Updated On :30 டிசம்பர் 2021, 7:19 am

DIN

கரோனா வழிமுறைகளை பின்பற்றி, உத்தரப் பிரதேச தேர்தலை சரியான நேரத்தில் நடத்தவே அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, "ஆளும் பாஜக, எதிர்கட்சியாக உள்ள சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தலை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. கரோனா பரவலில் இருந்து அபாயம் அதிகம் உள்ள மக்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளன.

அனைத்து தரப்பினரின் பிரச்னைகளையும் கேட்டுள்ளோம். கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி சரியான நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர். கோவிட் நெறிமுறைகளை மீறி பேரணிகள் நடத்தப்படுவது குறித்து அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி கட்டுப்பாடுகளை விதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அரசியல் கட்சிகள் முன்வைத்த அனைத்து விவகாரங்களையும் நாங்கள் அறிந்துள்ளோம். மேலும் எந்தவொரு வாக்காளரும் விட்டுவிடாத வகையில் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தலை நடத்துவோம்" என்றார்.

தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் குழு உத்தரப் பிரதேசத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.