75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு: நிர்மலா சீதாராமன்

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு: நிர்மலா சீதாராமன்
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு: நிர்மலா சீதாராமன்
Published on
Updated on
1 min read


புது தில்லி: 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாவது, 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியிருப்போர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அதில், சிறிய அளவிலான வருமான வரி பிரச்னைகளை தீர்த்து வைக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

மாத வருவாயாக, ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com