தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாஜகவால் ஊழல்வாதிகளை மட்டுமே விலைக்கு வாங்க முடியும்: மம்தா

தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் பாஜக அரசு மக்களை அச்சுறுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

News image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

Updated On :3 பிப்ரவரி 2021, 12:54 pm

DIN

தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் பாஜக அரசு மக்களை அச்சுறுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, மேற்கு வங்க மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி.-யை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.

பாஜகவால் ஊழலில் மூழ்கிய தலைவர்களை மட்டுமே விலைக்கு வாங்க முடியும். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்தவர்களை பாஜகவால் விலைக்கு வாங்க முடியாது. 

திரிணமூல் கட்சியிலிருந்து விலக விரும்புபவர்கள் விரைவில் விலகிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.