லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டம் மார்ச் மாதம் தொடங்கும்: அமைச்சர் ஹர்ஷ வர்தன்

நாட்டில் மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அடுத்த மாதம் துவங்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

News image
அமைச்சர் ஹர்ஷ வர்தன்
Updated On :5 பிப்ரவரி 2021, 1:09 pm

DIN

நாட்டில் மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அடுத்த மாதம் துவங்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கரோனா தடுப்பூசி குறித்து மக்களவையில் பேசிய அவர் கூறியதாவது: 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டு சீராக அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. 

இரண்டாம் கட்டம் பிப்ரவரி 2 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது. இதில் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு கோடி தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து மார்ச் மாதம் மூன்றாம் கட்டம் தொடங்கும். இதில் 50 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்படும். 

மத்திய பட்ஜெட்டில் 2021-22 கரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.35,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஒதுக்கீடு அதிகரிக்க முடியும் என்று நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மூன்றாம் கட்டம் தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தடுப்பூசிகளுக்கு மானியம் வழங்குவது குறித்து அமைக்கப்பட்டுள்ள தேசிய நிபுணர் குழு அது தொடர்பான முடிவுகளை எடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.