மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
Updated On :13 பிப்ரவரி 2021, 5:18 am

DIN


புது தில்லி: தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையின் சனிக்கிழமை அமா்வு, மாலை 4 மணிக்குப் பதிலாக, காலை 10 மணிக்கே நடைபெறும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு மக்களை தொடங்கியதும், பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்த உலகின் மிக முக்கிய பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றும் வகையிலேயே பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா பேரிடர் காரணமாக, இந்தியாவின் நீண்ட கால இலக்குகளை எட்டுவதற்கான திட்டங்களை ஒருபோதும் கைவிட முடியாது. தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பட்ஜெட் உரையின் போதே நான் தெளிவாகக் கூறியிருந்தேன், சுகாதாரத் துறையில் மிகச் சீரான அணுகுமுறையை மத்திய அரசு கையாண்டு வருகிறது என்று. முதலில், வரும் முன் காப்போம் என்ற கொள்கையையும், பிறகு, நோய் வந்தபின் அதனை போக்கும் வகையிலும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த அமா்வுக்குப் பிறகு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி மாா்ச் 8-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.