இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நவி மும்பையில் உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நவி மும்பையில் உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :14 பிப்ரவரி 2021, 4:06 pm

DIN

நவி மும்பையில் உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நவி மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பூஷன் பவார். இவர், இன்று காலை 11.30 மணியளவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 
தோட்டாக்களின் சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தகவலறிந்த உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். 
மேலும் பூஷன் பவார் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.