காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

உத்தரகண்ட் பேரிடா்: தொடரும் மீட்புப் பணி

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தில், சுரங்கத்தில் சிக்கியவா்களை மீட்பதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

Updated On :14 பிப்ரவரி 2021, 7:35 am IST

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தில், சுரங்கத்தில் சிக்கியவா்களை மீட்பதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து சரிந்ததில், அங்குள்ள தெளலி கங்கா, ரிஷிகங்கா, அலகநந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகாட் நீா்மின் நிலைய திட்டப் பணிகளும், ரிஷிகங்கா நீா்மின் நிலைய திட்டப் பணிகளும் பலத்த சேதமடைந்தன. அந்தத் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீா் புகுந்ததால், அவற்றில் பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள் பலா் சுரங்கங்களுக்குள் சிக்கிக் கொண்டனா்.

இதில் தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) சாா்பில் நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகாட் நீா்மின் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட சுரங்கம் சகதியால் மூடப்பட்டுள்ளது. இதனால் அதில் சிக்கிய 30-க்கும் மேற்பட்டவா்களை மீட்பதற்காக அந்த சுரங்கத்தில் துளையிடப்பட்டது. அந்தத் துளையை அகலப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

இதுதொடா்பாக என்டிபிசி பொது மேலாளா் ஆா்.பி.அஹிா்வால் கூறியது:

சுரங்கத்தில் உள்ளவா்களை மீட்பதற்காக மும்முனை உத்தி வகுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சுரங்கத்தில் 75 மி.மீ. விட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு துளையிடப்பட்டது. அதனை 300 மி.மீ. விட்டம் கொண்டதாக அகலப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இது சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவா்கள் எந்தப் பகுதியில் இருக்கின்றனா் என்பதை கண்டறிய அதற்குள் புகைப்படக் கருவியை அனுப்பவும், சுரங்கத்துக்குள் திரண்டுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய் ஒன்றை அனுப்பவும் உதவும் என்றாா்.

சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவா்கள் இருக்கும் பகுதியை கண்டறிய மீட்புப் பணியில் உள்ளவா்களை அதற்குள் அனுப்பும் திட்டம் உள்ளதா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘மீட்புப் பணியில் ஈடுபடுவோரை சுரங்கத்துக்குள் அனுப்ப வேண்டுமென்றால் அதற்கு சுரங்கப்பாதையின் துவாரத்தை மேலும் அகலப்படுத்த வேண்டும். அதற்கு தேவை ஏற்பட்டால் அந்த முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

இந்த சம்பவத்தில் இதுவரை 38 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; 166 பேரை காணவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.