தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேற்குவங்கத்தில் அடுத்தது எங்கள் ஆட்சிதான்: பாஜக எம்.பி. பேச்சு

மேற்குவங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தார். 

News image
மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ்
Updated On :15 பிப்ரவரி 2021, 6:57 am

DIN

மேற்குவங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தார். 

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பிரசாரம் அங்கு சூடுபிடித்துள்ளது. தற்போது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் நிலையில், பாஜக ஆட்சியைப் பிடிக்க தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் மேற்கு மிட்னாபூரின் ஹரிராஜ்பூரில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான திலீப் கோஷ், மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்துள்ளார். 

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும் எனவும் பாஜக பெரும்பான்மையை ஆட்சியைப் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், 'நாங்கள் இந்த தேர்தல் விளையாட்டில் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம். இதற்காக எங்களுடைய தேர்தல் யாத்திரையை நிறுத்த பல முறை முயன்றார்கள். ஆனால், தடைகளைத் தாண்டி இன்று மக்களை சந்திக்க வந்துள்ளேன். வரும் தேர்தலில் நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 

எங்கள் விளையாட்டு முடிந்துவிட்டது என்று எதிர்க்கட்சி சொல்கிறது, ஆனால் எங்கள் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்கிறேன். தயாராக இருங்கள். வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அவர்களின் முகத்தைப் பார்ப்பீர்கள். நாங்கள் அனைத்து விஷயங்களிலும் சட்டத்தைப் பின்பற்றுகிறோம். அதற்காக எங்களை கோழை என்று நினைத்துவிட வேண்டாம்' என்று பேசியுள்ளார். 

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வெளியேற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் யாத்திரையை கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் பாஜக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.