பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாஸ்டேக் வில்லை இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு அபராதம் வசூலிப்பு

சுங்கச்சாவடிகளில், பிப்.16-ஆம் தேதி முதல் பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து, பாஸ்டேக் வில்லை இல்லாத வாகன ஓட்டிகள்,  சுங்கச்சாவடிகளில் இரு மடங்குத் தொகையை செலுத்திச் செல்லும் நிலை ஏற்பட்டது.

News image
வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
Updated On :16 பிப்ரவரி 2021, 3:23 am

DIN

சுங்கச்சாவடிகளில், பிப்.16-ஆம் தேதி முதல் பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து, இல்லாத வாகன ஓட்டிகள்,  சுங்கச்சாவடிகளில் இரு மடங்குத் தொகையை செலுத்திச் செல்லும் நிலை ஏற்பட்டது.

பாஸ்டேக் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. 

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நிற்காமல் பயணம் செய்ய வசதியாக ‘பாஸ்டேக்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த வில்லைகளைப் பெற்று வாகனங்களில் ஒட்டிக் கொண்டால், சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் பிடித்தம் செய்யப்படும். இந்தமுறைக்கு வாகன உரிமையாளா்கள் மாறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை (பிப்.15) நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ‘பாஸ்டேக்’ முறை கட்டாயம் எனவும் பாஸ்டேக் பயன்படுத்தாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தவிா்ப்பதற்காக திங்கள்கிழமை காலை முதல் சுங்கச்சாவடிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் பாஸ்டேக் வில்லை விற்பனை முகாம்களில், வில்லைகளை வாங்குவதற்கு வாகன உரிமையாளா்கள் காத்து இருந்தனா்.

அவா்களுக்கு பாஸ்டேக் வில்லைகளைப் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு தானாகவே கட்டணம் பிடித்தம் செய்யும் தொழில்நுட்பத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், பாஸ்டேக் வில்லைகளை ஒட்டாத வாகனங்கள், சுங்கச்சாவடிகளைக் கடக்கும் போது இரு மடங்கு அபராதத் தொகையை செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.