அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

100-ஐத் தொட்டது பெட்ரோல் விலை: காங்கிரஸே காரணம் என்கிறாரா மோடி?

​பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், நடுத்தர குடும்பத்தினரின் சுமைக்கு முந்தைய அரசே காரணம் என பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக விமரிசித்துள்ளார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2021, 4:28 pm

DIN


பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், நடுத்தர குடும்பத்தினரின் சுமைக்கு முந்தைய அரசே காரணம் என பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாகப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களைப் பிரதமர் மோடி காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியது:

"நம்மைப் போன்ற ஒரு பன்முகத்தன்மையுடைய மற்றும் திறமையான தேசம் ஆற்றல் இறக்குமதியைச் சார்ந்து இருக்க முடியுமா?

நான் யாரையும் விமரிசிக்க விரும்பவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் நம்முடைய நடுத்தர வர்க்கத்தினர் சுமையை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்.

நடுத்தர மக்களின் கவலைகளை அரசு உணர்கிறது. அதனால்தான் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவும் வகையில் நாடு எத்தனால் மீது கவனம் செலுத்துகிறது."

தொடர்ந்து 9-வது நாளாக பெட்ரோல் விலை உயர்ந்ததையடுத்து, ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100-ஐத் தொட்டுள்ளது. இந்த நிலையில் முந்தைய அரசை மறைமுகமாக விமரிசிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.