ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உ.பி. பேரவை: ஆளுநர் உரையை புறக்கணித்து சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து சமாஜ்வாதி கட்சி வெளிநடப்பு செய்தது.

News image
உ.பி. பேரவை: ஆளுநர் உரையை புறப்பணித்து சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம்
Updated On :22 ஜூன் 2021, 6:37 am

DIN

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து சமாஜ்வாதி கட்சி வெளிநடப்பு செய்தது.

சட்டப் பேரவையில் ஆளும் பாஜகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தி பேரவைத் தலைவரையும் முற்றுகையிட்டதால், அவையில் அமளி நிலவியது.

உத்தரப் பிரதேச மாநிலம் லெக்னெளவில் சட்டப் பேரவைக் கூட்டம் இன்று கூடியது. இதில் ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையைத் தொடங்கியபோது சமாஜ்வாதி கட்சியினர் கூச்சல் எழுப்பினர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரப்பு தெரிவித்து பாஜகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அவையிலிருந்து சமாஜ்வாதி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சமாஜ்வாதி கட்சியினர் டிராக்டரில் கரும்புகளை ஏற்றிக்கொண்டு சட்டப் பேரவைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.