பாகிஸ்தான் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு: 4 வீரர்கள் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நான்கு துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நான்கு துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

கோஹ்லு மாவட்டத்தின் கஹான் பகுதியில் வியாழக்கிழமை இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஜமான் கான் சோதனைச் சாவடியில் ஆயுதமேந்திய துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன் விளைவாக நான்கு எல்லைப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலில் ஒரு வீரர் காயமடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பலுசிஸ்தானில் பிரிவினைவாதிகளால் முழுமையான சுயாட்சி அல்லது மாகாணத்தின் எரிவாயு மற்றும் கனிம வளங்களில் பெரும் பங்கைக் கோரி கிளர்ச்சியை எதிர்த்துப் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com