காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விவசாய சங்கத் தலைவர்களுடன் கேஜரிவால் நாளை ஆலோசனை

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை (பிப்.21) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :20 பிப்ரவரி 2021, 7:22 am

DIN


தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை (பிப்.21) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இதில் வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், போராட்டத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 80 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஜிப்பூர், திக்ரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் அவ்வபோது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் விவசாயிகளுக்குத் தேவையான குடிநீர், கழிவரை போன்ற அடிப்படை வசதிகளை ஆம் ஆத்மி அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விவசாய சங்கத் தலைவர்களுடன் முதல்வர் கேஜரிவால் நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.