தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கேரளம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு உயர்வு

கேரளம் உள்பட 5 மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :20 பிப்ரவரி 2021, 12:08 pm

கேரளம் உள்பட 5 மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.43 லட்சமாக (1,43,127)  பதிவாகியுள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.30 சதவீதமாகும். கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அன்றாட பாதிப்பு அதிகரித்து வருகிறது. 
நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 75.87 சதவீதத்தினர் மகாராஷ்டிரம் மற்றும் கேரளாவை மட்டுமே சேர்ந்தவர்கள். நாட்டில் இதுவரை 21 கோடிக்கும் அதிகமான (21,02,61,480) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிப்ரவரி 20, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 3,50,283 பேர், புதுச்சேரியில் 9,126 பேர் உட்பட, நாடு முழுவதும் 1,07,15,204 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
2,22,313  முகாம்களில் 63,28,479 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 8,47,161 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 35,39,564 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 35-ஆம் நாளில் (பிப்ரவரி 20, 2021) 10,851 முகாம்களில் 5,27,197 பயனாளிகளுக்கு (2,90,935 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 2,36,262 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,67,741 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.27 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,307 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 6,112 பேரும், கேரளத்தில் 4,505 பேரும், தமிழ்நாட்டில் 448 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 101 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.