மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உன்னாவ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் ஆசாத் கான்பூரில் தடுத்து நிறுத்தம்

​உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் பார்ப்பதற்காகச் சென்ற பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் திங்கள்கிழமை காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 2:45 pm

DIN


உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் பார்ப்பதற்காகச் சென்ற பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் திங்கள்கிழமை காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து, அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி பீம் ஆர்மி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்திலுள்ள பாபுகரா கிராமத்தில் கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிப்பதற்காக வயலுக்குச் சென்ற  மூன்று தலித் சிறுமிகள் கடந்த புதன்கிழமை கை கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தனர். அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றொரு சிறுமிக்கு கான்பூரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதில் உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் குடும்பத்தினரைச் சந்தித்த சந்திரசேகர் ஆசாத், ரெஜென்சி மருத்துவனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் மூன்றாவது சிறுமியை நேரில் சந்திக்கச் சென்றார். அப்போது காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் சிகிச்சை பெற்று வரும் மூன்றாவது சிறுமியை மேம்பட்ட சிகிச்சைக்காக அரசு தில்லிக்கு அனுப்பாவிட்டால் உன்னாவ் செல்வதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.