அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இளைஞர்கள் விரும்பும் மாற்றத்தை தாமரை தரும்: மேற்கு வங்கத்தில் மோடி

​மேற்கு வங்கத்தில் இளைஞர்கள் விரும்பும் மாற்றத்தை தாமரை தரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 1:36 pm

DIN


மேற்கு வங்கத்தில் இளைஞர்கள் விரும்பும் மாற்றத்தை தாமரை தரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஹூக்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசியது:

"பண கலாசாரம், மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்டவை இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. அரசியல் மாற்றத்துக்காக மட்டுமில்லாமல் மேற்கு வங்கத்தின் மாற்றத்துக்காகவே பாஜக அரசு அமைய வேண்டும்.   

இளைஞர்கள் விரும்பும் அந்த மாற்றத்தை தாமரை கொடுக்கும். நிஜ மாற்றத்தின் நம்பிக்கையில் இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மேற்கு வங்கத்தில் பாஜக அரசை அமைக்க வேண்டும்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொழில் துறை கொள்கைகளில் பாஜக அரசு மாற்றங்கள் கொண்டு வரும். உடனடி மாற்றத்துக்காக துரித முடிவுகள் எடுக்கப்படும்.

மாநில அரசு பணியாற்றும் விதத்தைப் பார்த்தால் ஏழை மக்களுக்கு குடிநீர் போய் சேர எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை. மண்ணின் மகள் முழக்கத்துக்கு திரிணமூல் அநீதி இழைப்பதையே இது காட்டுகிறது. அவர்களை மன்னிக்கலாமா? 

விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாக பணத்தை செலுத்திகிறது. ஆனால், பணம் சார்ந்த பயன்களைப் பெறும் திட்டங்கள் திரிணமூலின் மிரட்டிப் பணம் பறித்தல் கும்பலின் அனுமதியில்லாமல் ஏழை மக்களைச் சென்றடைவதில்லை. இதனால்தான், திரிணமூல் தலைவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள். சாதாரண குடும்பத்தினர் ஏழைகள் ஆகின்றனர்.

அம்பான் புயல் நிவாரணப் பணிகளுக்காக மேற்கு வங்க திரிணமூல் அரசுக்கு மத்திய அரசு ரூ. 1,700 கோடி வழங்கியது. மாநில அரசு அதில் வெறும் ரூ. 609 கோடியை மட்டுமே செலவிட்டது. மீதமுள்ள ரூ. 1,100 கோடியை திரிணமூல் கையாடல் செய்துவிட்டது."

மேற்கு வங்க மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் பேரவைத் தேர்தல் வரவுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் இடையே கடும் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.