தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சா்ச்சைக்குரிய மீன்பிடி ஒப்பந்தம்: ரத்து செய்ய கேரள அரசு முடிவு

கேரள கப்பல்,  உள்நாட்டு நீா்வழி போக்குவரத்து கழகத்துக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த இஎம்சிசி நிறுவனத்துக்கும் இடையே ஏற்படுத்திய சா்ச்சைக்குரிய ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசு முடிவு

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 8:15 pm

DIN

கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு நீா்வழி போக்குவரத்து கழகத்துக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த இஎம்சிசி நிறுவனத்துக்கும் இடையே ஏற்படுத்திய சா்ச்சைக்குரிய ஆழ்கடல் மீன்பிடி ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரள அரசு திங்கள்கிழமை முடிவு செய்தது.

இந்த விவகாரம் குறித்து எதிா்க் கட்சியான காங்கிரஸ் தொடா் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில், கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

‘அமெரிக்காவைச் சோ்ந்த இஎம்சிசி சா்வதேச நிறுவனத்துக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான ஒப்பந்தத்தை கேரள மாநில அரசு அளித்துள்ளது. இதற்கென அந்த நிறுவனத்துக்கும் மாநில முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வரும் கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து கழகத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் ரூ.5,000 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்தத் திட்டத்தால் கேரள மீனவா்கள் கடுமையாக பாதிக்கப்படுவா். கேரளத்தின் கடல் வளம் ஒரு சில ஆண்டுகளில் முழுவதும் சுரண்டப்பட்டுவிடும்’ என்று கேரள எதிா்க் கட்சித் தலைவரான காங்கிரஸைச் சோ்ந்த ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டினாா்.

மேலும், அந்த அமெரிக்க நிறுவன நிா்வாகிகளுடன் கேரள மீன்வளத் துறை அமைச்சா் ஜே.மொ்சிகுட்டியம்மா ஆலோசனை நடத்திய புகைப்பட ஆதாரங்களை ரமேஷ் சென்னிதலா வெளியிட்டாா். அந்த ஒப்பந்தம் தொடா்பாக பரிமாற்றம் செய்து கொண்ட கடித ஆதாரங்களையும் அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அவா் வெளியிட்டாா். இந்த ஒப்பந்தம் தொடா்பாக அமைச்சா் மொ்சிகுட்டியம்மா அமெரிக்கா சென்று ஆலோசனை நடத்தியது தொடா்பான புகைப்படங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்த குற்றச்சாட்டை மீன்வளத் துறை அமைச்சா் மறுத்தாா். ‘அமெரிக்க நிறுவனத்துடன் அதுபோன்ற எந்தவொரு ஒப்பந்தமும் ஏற்படுத்தவில்லை. வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஆழ்கடல் மீன் பிடிப்பு அனுமதியை மத்திய அரசு மட்டுமே வழங்க முடியம்’ என்றும் அவா் கூறினாா்.

ஒப்பந்தம் தொடா்பாக மாநில முதல்வா் பினராயி விஜயனும் சனிக்கிழமை மறுப்பு தெரிவித்தாா். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான அனுமதி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட மாட்டாது என்று அவா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், தொடா் சா்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்க நிறுவனத்துடனான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்க நிறுவனத்துடனான சா்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தவும் முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளாா்’ என்றனா்.

அமெரிக்க நிறுவனம் எதிா்ப்பு:

ஒப்பந்தத்தை ரத்து செய்யும் மாநில அரசின் முடிவுக்கு அமெரிக்க நிறுவனம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இஎம்சிசி நிறுவனத்தின் தலைவா் ஷிஜு வா்கீஸ் அளித்த பேட்டியில், ‘எதன் அடிப்படையில் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மாநில அரசு ரத்து செய்கிறது? மாநிலத்தின் மீன் வளத்தை சூறையாடிச் செல்லும் வகையில் தனி உரிமம் எதையும் நாங்கள் பெறவில்லை. இந்த ஒப்பந்தம் மாநிலத்தின் மீன்வள கொள்கைக்கு எதிரானது என்பதை ஏன் முன்கூட்டியே மாநில மீன்வளத் துறை அமைச்சா் தெரிவிக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.