‘இருவருக்காக இருவர் நடத்தும் ஆட்சி மோசமானது’: ராகுல் காந்தி

இரு நபர்களுக்காக இருவர் ஆட்சி நடத்தி வருவது மோசமானது என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவரும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
‘இருவருக்காக இருவர் ஆட்சி என்பது மோசமானது’: ராகுல் காந்தி
‘இருவருக்காக இருவர் ஆட்சி என்பது மோசமானது’: ராகுல் காந்தி

இரு நபர்களுக்காக இருவர் ஆட்சி நடத்தி வருவது மோசமானது என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தலைவரும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் மீனவர்களுக்காக தனித் துறையை அமைப்போம் என அளித்த வாக்குறுதியால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், அத்தகைய துறையை தாங்கள் 2019ஆம் ஆண்டே அமைத்து விட்டதாகவும் தெரிவித்தார். 

இதற்கு தனது சுட்டுரையில் பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மீனவர்களுக்கு ஒரு சுயாதீனமான மற்றும் அர்ப்பணிப்புள்ள மீன்வள அமைச்சகம் தேவை. ஒரு அமைச்சகத்திற்குள் ஒரு துறை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இருவருக்காக இருவர் நடத்தும் ஆட்சி என்பது மோசமானது என அவர் விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com