உ.பி. லா மார்ட் பள்ளியில் கரோனா: அடுத்த 2 நாள்களுக்குப் பள்ளி மூடல்

லக்னௌவில் உள்ள புகழ்பெற்ற லா மார்டினியர் ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் ஆறு பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த இரண்டு நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டுள்ளது. 
உ.பி. லா மார்ட் பள்ளியில் கரோனா
உ.பி. லா மார்ட் பள்ளியில் கரோனா
Updated on
1 min read

லக்னௌவில் உள்ள புகழ்பெற்ற லா மார்டினியர் ஆண்கள் பள்ளியில் பணியாற்றும் ஆறு பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதையடுத்து, அடுத்த இரண்டு நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், 

கரோனா பாதிக்கப்பட்ட ஆறு பேரில் இருவர் பள்ளி வளாகத்தில் தங்கியிருக்கிறார்கள். நான்கு பேர் ஆஷியானா பகுதியில் வசிப்பவர்கள். 

கரோனா பாதித்தவர்கள் பள்ளியில் கட்டுமான தளத்தில் பணியாற்றி வருவதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் எந்த தொடர்பிலும் இல்லை என்று அவர் கூறினார். 

பள்ளி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக்குழு ஒன்று பள்ளிக்கு வந்து அங்குள்ள 323 பேரின் மாதிரிகள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். 

மேலும், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கரோனா சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொதுச் சுகாதார இயக்குனர் டாக்டர்.டி.எஸ்.நேகி தெரிவித்தார். 

பிரயாகராஜில் உள்ள பிஷப் ஜான்சன் பள்ளியில் ஒன்பது பேருக்கும், செயின்ட் ஜோசப் பள்ளியில் நான்கு பேருக்கும் ஏற்கெனவே கரோனா தொற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com