தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேற்கு வங்கம்: பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மேற்கு வங்கத்தில் இரவோடு இரவாக பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அலுவலகம் முழுவதுமாக சேதமடைந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :27 பிப்ரவரி 2021, 8:07 am

DIN

மேற்கு வங்கத்தில் இரவோடு இரவாக பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அலுவலகம் முழுவதுமாக சேதமடைந்தது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக அலுவலகத்திலிருந்த பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் பரநகர் பகுதியில் செயல்பட்டு வந்த பாஜக அலுவலகம் மீது நேற்று (பிப்.26) மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் அலுவலகத்தின் வாயில்களில் வைக்கப்பட்டிருந்த பதாகை, விளம்பரப் பலகைகள் சேதமடைந்தன.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், கட்சி நிர்வாகி ஒருவரை தாக்கியதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.