செளதி அரேபியாவிலிருந்து கேரளத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.3 கோடி தங்கம் பறிமுதல்
செளதி அரேபியாவிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு ரூ.1.3 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


செளதி அரேபியாவிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு ரூ.1.3 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
செளதி அரேபியாவிலிருந்து கோழிக்கோடுக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து பயணிகளிடையே சோதனையை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.
அப்போது செளதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து இண்டிகோ விமானத்தில் வந்த கோழிக்கோடு வந்த இருவர் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான 2,596 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...