திருவானந்தபுரம்: கேரளத்தில் சட்டப் பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிவித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் தலைமயில் அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் 22-வது அமர்வாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் மாநிலத்திற்கான பட்ஜெட் தாக்கல் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில நிதியமைச்சர் ஐசக் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.