மேற்கு வங்கம் செல்ல ஜெ.பி. நட்டா மீண்டும் திட்டம்

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மீண்டும் மேற்கு வங்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா  (கோப்புப்படம்)
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா (கோப்புப்படம்)
Updated on
1 min read

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா மீண்டும் மேற்கு வங்கம் செல்ல திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கத்தின் பிர்பும் பகுதிக்கு ஜனவரி 9-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அங்கு பொதுமக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பிரசாரம் மேற்கொள்ளும் வகையிலும், தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி மேற்கு வங்கத்திற்கு சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக ஜனவரி 9-ஆம் தேதி மீண்டும் அவர் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

அங்கு பாஜக பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், பொதுமக்களை சந்தித்து பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com