இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த ஆய்வில், இது பறவைக் காய்ச்சல் பாதிப்புதான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஹெச்5என்8 என்ற பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள அனைத்து கோழி, வாத்து போன்ற வீட்டு வளா்ப்பு பறவைகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமாா் 40,000 பறவைகள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றனா்.