சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காஜியாபாத்: மயான கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் பலி: மாயாவதி இரங்கல்

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் முராத் நகரில் உள்ள மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தல

News image
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி
Updated On :4 ஜனவரி 2021, 8:51 pm

DIN

புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் முராத் நகரில் உள்ள மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், தவறிழைத்தவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘முராத் நகரில் மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து இரண்டு டஜன் மக்கள் உயிரிழந்த விவகாரம் துயரமானது. இதனால், மனம் வருந்துகிறேன்.

இது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். தவறிழைத்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறிழைத்த யாரையும் தப்ப அனுமதிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.