தில்லியில் புதிதாக 442 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் புதிதாக 442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 442 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,27,698 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 557 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 12 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 6,12,527 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 10,609 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 4,562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.55 சதவிகிதமாக உள்ளது. கடந்த 10 நாள்களின் தரவுகளின்படி இறப்பு விகிதம் 3.07 சதவிகிதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...