தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலிண்டர் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.56-க்கு நிகழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு தில்லியின் ஹரி நகர்ப் பகுதியில் ஆஷா பூங்காவின் ஜி-பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் வீட்டின் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிறு காயங்களுடன் 5 பேரும் உயிர் தப்பினர்.
விபத்தில் சிக்கிய மூன்று குழந்தைகளும் 10 முதல் 12 வயத்திற்குட்பட்டவர்கள் ஆவார். கணவன் மனைவி மற்றும் 3 குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று மேற்கு தில்லியின் டிசிபி தீபக் புரோஹித் தெரிவித்தார்.