தில்லியில் சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்

தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலிண்டர் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். 
தில்லியில் சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்
தில்லியில் சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்

தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலிண்டர் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.56-க்கு நிகழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேற்கு தில்லியின் ஹரி நகர்ப் பகுதியில் ஆஷா பூங்காவின் ஜி-பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் வீட்டின் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிறு காயங்களுடன் 5 பேரும் உயிர் தப்பினர். 

விபத்தில் சிக்கிய மூன்று குழந்தைகளும் 10 முதல் 12 வயத்திற்குட்பட்டவர்கள் ஆவார். கணவன் மனைவி மற்றும் 3 குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று மேற்கு தில்லியின் டிசிபி தீபக் புரோஹித் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com