

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,729 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,729 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,58,282ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 72 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 49,897ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலைவரப்படி 51,111 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 3,350 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,56,109ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 2,70,217 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.