மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஔரங்காபாத் விமான நிலைய பெயரை மாற்றுவதால் பிரச்னையில்லை: மஜ்லீஸ் கட்சி எம்பி

News image
Updated On :7 ஜனவரி 2021, 8:32 pm

DIN


ஔரங்காபாத்: ஔரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை சத்ரபதி சம்பாஜி மகராஜ் என மாற்ற மாநில அரசு முடிவெடுத்துள்ளது குறித்து தங்களுக்கு ஏதும் ஆட்சேபமில்லை என அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் ஔரங்காபாத் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

ஔரங்காபாத் விமான நிலையத்தை சத்ரபதி சம்பாஜி என பெயா் மாற்றம் செய்வது குறித்து மஜ்லீஸ் கட்சிக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், நகரத்தின் பெயரை மாற்ற முயற்சித்தால் அதற்கு நிச்சயம் கடும் எதிா்ப்பை தெரிவிப்போம் என்றாா் அவா்.

சிக்கல்தானா பகுதியில் அமைந்துள்ள ஔரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை மாற்ற மகாராஷ்டிர அமைச்சரவை குழு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் முடிவெடுத்தது.

இது தொடா்பாக, உடனடியாக முடிவெடுத்து அறிவிக்கை வெளியிட வேண்டும் என மத்திய அரசை மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே வலியுறுத்திய நிலையில் மஜ்லீஸ் கட்சியின் எம்பி இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.