கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உ.பி.யில் போலி மதுபானம் அருந்திய 5 பேர் பலி; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சிங்கந்தர்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீத்கரி கிராமத்தில் போலி மதுபானம் அருந்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2021, 7:38 am

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சிங்கந்தர்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீத்கரி கிராமத்தில் போலி மதுபானம் அருந்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில் நான்கு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், போலி மதுபான விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (என்எஸ்ஏ) செயல்படுத்துமாறு அவர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.  மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஜீத்கரி  கிராமத்தில் போலி மதுபான விற்பனையைத் தடுக்கத் தவறியதாக சிக்கந்தராபாத் காவல் நிலைய ஹவுஸ் அதிகாரி (எஸ்.எச்.ஓ) மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல்துறை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.