டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நேதாஜியின் மருமகள் மாரடைப்பால் உயிரிழப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகளும், கல்வியாளருமான சித்ரா கோஷ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 90.

News image
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகளும், கல்வியாளருமான சித்ரா கோஷ் (கோப்புப்படம்)
Updated On :8 ஜனவரி 2021, 1:02 pm

DIN

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகளும், கல்வியாளருமான சித்ரா கோஷ் மாரடைப்பால் உயிரிழந்தார். 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகள் சித்ரா கோஷ் கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பை தந்தமைக்காக பலராலும் அறியப்பட்டவர். 

90 வயதான அவர் நேற்று (ஜன. 7) காலை 10.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சித்ரா கோஷின் மருமகனும் பாஜக தலைவருமான சந்திர குமார் போஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்களுக்கு கற்பிக்கவும், இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் என்று தமது சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

சித்ரா கோஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''கல்வி மற்றும் சமூக சேவையில் முன்னோடியான பங்களிப்பை அளித்தவர் பேராசிரியர் சித்ரா கோஷ். அவருடனான எனது கலந்துரையாடலை நினைவுகூர்கிறேன். 

நேதாஜியின் கோப்புகளை வகைப்படுத்துதல் உள்பட பல துறைகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளோம். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடுபத்திற்கு ஆழ்ந்த இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.