தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தில்லியில் பறவைகளை தருவிக்கத் தடை: கேஜரிவால்

தில்லியில் கோழி உள்ளிட்ட பறவைகளை கொண்டுவருவதற்கு தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :9 ஜனவரி 2021, 11:40 am

DIN

தில்லியில் கோழி உள்ளிட்ட பறவைகளை கொண்டுவர தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் கடந்த 2 முதல் 3 நாள்களாக 200க்கும் அதிகமான பறவைகள் இறந்துள்ளன. மத்திய உயிரியல் பூங்காவில் காகம் உள்ளிட்ட பறவைகளும் அடுத்தடுத்து இறந்து வருகின்றன.

இதனால் பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜரிவால், ''பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பரிசோதனை முடிவுகள் வெளியாகும். பறவைக் காய்ச்சல் பரவி வரும் சூழலில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்து வருகிறது.

இதனால் தில்லி நகருக்குள் பறவைகளை கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. காஸிப்பூர் பண்ணை அடுத்த 10 நாள்களுக்கு செயல்படாது'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.