கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீ விபத்து: அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய உத்தரவு

மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய துணை முதல்வரும், நிதியமைச்சருமான அஜித் பவார் உத்தரவிட்டுள்ளார்.

News image
துணை முதல்வரும், நிதியமைச்சருமான அஜித் பவார் (கோப்புப்படம்)
Updated On :9 ஜனவரி 2021, 5:44 am

DIN

மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய துணை முதல்வரும், நிதியமைச்சருமான அஜித் பவார் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா அரசு பொது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இருந்த பிரிவில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதனை சரிசெய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.