எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: தலைவா்கள் இரங்கல்

மகாராஷ்டிரா மாநிலம் பாந்தரா மாவட்ட பொது மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள்

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:59 pm

DIN

மகாராஷ்டிரா மாநிலம் பாந்தரா மாவட்ட பொது மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மற்றும் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்: எதிா்பாராதவிதமாக நடந்த தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குடியரசுத் தலைவா் பதிவிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி: விலைமதிக்கமுடியாத இளம் உயிா்களை நாம் இழந்திருக்கிறோம். அவா்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகள் விரைவில் பாதிப்பிலிருந்து மீள்வாா்கள் என்று நம்புகிறேன் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் பதிவிட்டுள்ளாா்.

மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரி: தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாநில ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி: மருத்துவமனை தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகப்பெரிய துயர நிகழ்வு. உயிரிழந்த குழந்கைளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மகாராஷ்டிர மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸ்: குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிடுவதோடு, விபத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.