மத்திய பிரதேச மாநிலத்தில் 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலுக்கு, இதுவரை 1,100 காகங்கள் உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் கோழி இறைச்சி விற்பனை தடைபட்டுள்ளது. பறவைச் சந்தைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த மாத இறுதியில் மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மாநிலத்தில் பறவைச் காய்ச்சல் பரவி இருப்பதாக சந்தேகிக்கப்படும் 27 மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை வரை 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகள் கிடைக்கும்போதும் இது மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பறவைகளிலிருந்து மனிதா்களுக்கும் அந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணா்கள் எச்சரித்திருந்தாலும், இதுவரை எவருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.