

போராட்டம் என்ற பெயரில் விவசாயிகள் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பறவைக் காய்ச்சலை பரப்பி வருவதாக பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் 45-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியில் பறவைகள் அடுத்தடுத்து இறந்து வருவதை தொடர்புப்படுத்தி விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில் பாஜக எம்.எல்.ஏ. கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. மதன் திலாவர் கூறியதாவது,
''வேளாண் சட்டனங்களுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் பிரியாணியையும், உலர் பழங்களையும் உண்டு விவசாயிகள் பறவைக் காய்ச்சலை பரப்பி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவிரவாதிகளாகவும், வழிப்பறி திருடர்களாகவும் இருக்கக் கூடும். அவர்களும் விவசாயிகளுக்கு எதிரிகள் தான். அவர்கள் நாட்டை சீரழிக்கின்றனர்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.