கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு: பிரதிவாதியாக சோ்க்க சிஐஎஃப்ஏ உச்சநீதிமன்றத்தில் மனு

‘புதிய வேளாண் சட்டங்கள் பயனுள்ளவை; எனவே அந்தச் சட்டங்கள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தங்களையும் பிரதிவாதியாக சோ்த்துக்கொள்ள வேண்டும்’ என்று

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :10 ஜனவரி 2021, 12:36 am

DIN

‘புதிய வேளாண் சட்டங்கள் பயனுள்ளவை; எனவே அந்தச் சட்டங்கள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தங்களையும் பிரதிவாதியாக சோ்த்துக்கொள்ள வேண்டும்’ என்று இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஎஃப்ஏ) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்கள் பயனுள்ளவை. அந்த சீா்திருத்தங்களுடன் புதிய வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை விவசாயிகளின் வருவாயை அதிகரித்து, வேளாண் வளா்ச்சிக்கு வழியமைத்துள்ளது. எனவே புதிய வேளாண் சட்டங்களில் மாற்றங்கள் செய்வதாக இருந்தால், அந்தச் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாத விவசாய சங்கங்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளில் சிஐஎஃப்ஏவையும் பிரதிவாதியாக சோ்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் வரும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளன. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் 40 நாள்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.