பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கரோனா எதிரொலி: குஜராத் கோயில்களில் விழுந்து கும்பிட தடை

கரோனா பேரிடருக்குப் பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் கோயில்களில் சுவாமியை வணங்கும் முறையும் இணைந்து கொண்டுள்ளது.

News image

கரோனா எதிரொலி: குஜராத் கோயில்களில் விழுந்து கும்பிட தடை

Updated On :13 ஜனவரி 2021, 6:58 am


ஆகமதாபாத்: கரோனா பேரிடருக்குப் பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் கோயில்களில் சுவாமியை வணங்கும் முறையும் இணைந்து கொண்டுள்ளது.

அதாவது, குஜராத்தில் உள்ள கோயில்களில், கோயிலை வலம் வந்த பிறகு, விழுந்து வணங்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிலாக பக்தர்கள் அனைவரும் நின்று கையெடுத்து கும்பிட மட்டுமே செய்யலாம்.

அதுபோலவே, வெளியிலிருந்து பிரசாதம் செய்து கொண்டு வந்து கோயிலுக்குள் பக்தர்களுக்கு விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, கோயில்களில் விழுந்து கும்பிட தடை விதிக்கப்பட்டிருப்பதாக குஜராத்தில் உள்ள சோமநாதர் திருக்கோயிலின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.