தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 382 பறவைகள் இறப்பு

பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நாளில் மட்டும் 382 பறவைகள் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image

பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 382 பறவைகள் இறப்பு (கோப்புப்படம்)

Updated On :15 ஜனவரி 2021, 3:00 pm

DIN

பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நாளில் மட்டும் 382 பறவைகள் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

கேரளாவைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் பறவைக் காய்ச்சலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் நேற்று (ஜன. 14) ஒரு நாளில் மட்டும் 382 பறவைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால் மகாராஷ்டிரத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் இதுவரை 2,378 பறவைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.