கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதால், கரோனாவுக்கு எதிரான போரில் விரைவில் வெற்றி பெறுவது உறுதி என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியது:
"கரோனாவுக்கு எதிரான போரில் ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளோம். கடந்த 3, 4 மாதங்களின் குணமடைவோர் மற்றும் இறப்பு விகிதங்களின் தரவுகள் நாம் கரோனாவுக்கு எதிரான வெற்றியை நோக்கி நகருவதையே உணர்த்துகிறது.
இதை துரிதப்படுத்துவதற்காக நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் பரிசோதனைக்கு முன்வந்த தன்னார்வலர்கள் ஆகியோரது உதவியுடன் நமது விஞ்ஞானிகள் 2 உள்நாட்டு தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளனர்.
கரோனாவுக்கு எதிரான போரில் தற்போது தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்தப் போரில் வெற்றியை நோக்கி நகர்ந்து வந்தோம். தற்போது வெற்றியை விரைவில் அடைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
தடுப்பூசி குறித்தும், தடுப்பூசியின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்தும் சிலர் வதந்திகள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர். ஆனால், இன்று நிறைய பேர் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சிறந்த மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சுகாதாரத் துறை அமைச்சர்களோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்கிற விவாதம் எழுந்துள்ளது. நான் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று என்னிடம் கேள்வியெழுப்பப்பட்டது. நான் எனது வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்போது நானும் செலுத்திக்கொள்வேன். மக்கள் பிரதிநிதிகள் முதலில் தடுப்பூசியை செலுத்திக்கொண்டால், இந்தத் தலைவர்கள் முதலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர் என்று இவர்கள் பேசுவார்கள். அதனால், அதுபோன்ற விவாதங்கள் குறித்து நாம் கவலைப்படக் கூடாது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபரிமலையில் பெண்களுக்கான கட்டுப்பாடு நீதிமன்ற மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு

சீனாவில் எரிபொருள் விலையுயா்வு; இலங்கையில் மானியம் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


