பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும்: ஆளுநர்

மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்று அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

News image
மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் (கோப்புப்படம்)
Updated On :17 பிப்ரவரி 2021, 12:46 pm

DIN


மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்று அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி வரும் ஏப்ரல் மாத இறுதியுடன் முடிவடையவுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக பாஜக தலைவர்கள் மாநில பாஜக நிர்வாகிகளை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களை சந்திக்கும் வகையிலும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தொடர்ந்து ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் அவ்வபோது இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் என்று உறுதியளிப்பதாக ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

நடுநிலையாகவும், வன்முறைகளின்றியும் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று ஆளுநர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.