எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சசிகலாவிற்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு

சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
சசிகலா (கோப்புப்படம்)
Updated On :28 ஜனவரி 2021, 4:41 pm

DIN

சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்ற வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் 2017-இல் அடைக்கப்பட்டனர்.  
இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, அவர் பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பெளரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதியானது. தற்போது கரோனா தொற்று குறைந்து, அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விக்டோரியா மருத்துவமனை தரப்பில் மேலும் தெரிவிக்கையில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 278ஆக இருப்பதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதனிடையே விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 4 ஆண்டுகால சிறைத்  தண்டனை முடிந்துவிட்டதால், புதன்கிழமை காலை 11 மணிக்கு மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் லதா இருவரும் மருத்துவமனைக்குச் சென்று சசிகலாவை விடுதலை செய்துவிட்டதாக அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.