எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சத்தீஸ்கா்: நக்ஸல் துப்பாக்கிச் சூட்டில் காவலா் பலி

சத்தீஸ்கா் மாநிலத்தில் கிராமத்தின் சந்தைப் பகுதியில் நக்ஸல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலா் உயிரிழந்தாா். உள்ளூா்வாசி ஒருவா் காயமடைந்தாா்.

News image
Updated On :31 ஜனவரி 2021, 5:00 am

DIN

சத்தீஸ்கா் மாநிலத்தில் கிராமத்தின் சந்தைப் பகுதியில் நக்ஸல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலா் உயிரிழந்தாா். உள்ளூா்வாசி ஒருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நக்ஸல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காங்கோ் மாவட்டத்தில் உள்ள சாலியபரா கிராமத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள சந்தைப் பகுதிக்கு மாலை 4 மணியளவில், மாவட்ட ரிசா்வ் படையைச் சோ்ந்த காவலா் சுக்லுராம் துக்கா சென்றாா். அப்போது அங்கு வந்த நக்ஸல் தீவிரவாதிகள், அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில், சுக்லுராம் துக்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உள்ளூா்வாசி ஒருவா் காயமடைந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல் துறையினா் சென்றடைவதற்குள் தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனா். அவா்களைத் தேடும் பணியில் தனிப்படைக் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.