இதுவரை 35 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் சனிக்கிழமை வரை 35,00,027 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் சனிக்கிழமை வரை 35,00,027 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 5,71,974 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒட்டுமொத்தமாக 35,00,027 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 4,63,793 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 3,24,973 பேருக்கும், கா்நாடகத்தில் 3,07,891 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 2,61,320 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் 2,46,281 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 2,21,994 பேருக்கும், குஜராத்தில் 2,21,675 பேருக்கும், ஒடிஸாவில் 2,05,200 பேருக்கும், ஆந்திரத்தில் 1,79,038 பேருக்கும், தெலங்கானாவில் 1,66,606 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து முன்களப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி வழங்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...